நவம்பர் 26, 2022 – கொழும்பு: செயற்பாடுகளுடன் கூடிய பேச்சு ஆங்கிலப் பயிற்சி அடுத்த வருடம் தரம் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பமாகும் என்று தெரிவித்த அமைச்சர் பிரேமஜயந்த, இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 13,000 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் பிற நிறுவனங்களும் இதற்கு உதவுவதாகவும், தேவையான பணிப்புத்தகங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்பருவத்திற்கான வேலைத்திட்டமும் அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார். சபையின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு தரம் ஒன்றிலிருந்து பேச்சு-ஆங்கிலம் அறிமுகம் – அமைச்சர்

Leave a comment