ஜனவரி 01, 2023: கடந்த சில மாதங்களாக எமது பகுதியில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுவதுடன் அதன் விளைவுகளும் மிக மோசமாக் காணப்படுவதனால் நேற்று 31.12.2022 ஆம் திகதி ஸாலிஹீன் பள்ளிவாயல் நிர்வாக சபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பின்வரும் விடயங்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2023 ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளன.
- போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணத்திற்கு எமது பள்ளிவாயலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.
- போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாயலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.
- போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்பவர்களை பள்ளியில் நடைபெறும் எந்த நல்ல விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட மாட்டாது (அழைக்கப்படவும் மாட்டார்கள்)
- போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பெயர் விபரங்கள் விளம்பரப் பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும்.
- போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் விபரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் மஹல்லா உரிமம் இரத்துச் செய்யப்படும்.