மார்ச் 18, 2023, கொழும்பு: போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் போலியாக நபர்களை கைது செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.
“பொலிசார் சமீபகாலமாக போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பலரைக் கைது செய்துள்ளனர், ஆனால் சந்தேக நபர்களிடம் இருந்து அவர்கள் கைப்பற்றிய பொருட்கள் போதைப்பொருள் அல்ல என்று அமைச்சர் கூறினார்.
“உண்மையான கைதுகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். “சந்தேக நபர்களிடம் இருந்து “பனடோல்” தூள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. பழிவாங்கும் நடவடிக்கையாக போலீசாருக்கு தவறான குறிப்புகள் வழங்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன, ”என்று அவர் கூறினார்.
நிலைமையை கண்காணிப்பதற்கும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம் என அமைச்சர் உறுதியளித்தார்.